குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து காலி குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் வழங்காத பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-24 11:32 GMT
குடிநீர் பிரச்சினைக்காக சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் ஒன்பதாவது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக நகராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகின்றது. இதனையடுத்து இப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அப்பகுதிக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி இப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெரம்பலூர்-திருச்சி சாலையில் துறைமங்கலம் 3 ரோடு பகுதியில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News