பெரம்பலூர் மாவட்டத்தில் 189 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 189 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 12,727 நபர்கள் தடுப்பூசி செலுத்தினர்

Update: 2021-09-19 16:48 GMT

பைல்படம்

 பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் இன்று 189 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்), வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்.

சத்துணவு அமைப்பாளர்கள், பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,200 நபர்கள் பொது மக்களை ஒருங்கிணைத்து,  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொண்டதன் அடிப்படையில், முதல்கட்டமாக 12.09.2021 அன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில், பெரம்பலுர் மாவட்டத்தில் 24082 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து,  இரண்டாம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு சென்று, டோக்கன் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 3739 நபர்களுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2675 நபர்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 3014 நபர்களுக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 3299 நபர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் 12727 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா தகவல் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News