பெரம்பலூரில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

பெரம்பலூரில் இன்று மேலும் 17 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Update: 2021-04-22 13:45 GMT

பெரம்பலூரில் இன்று புதிதாக 10 பேருக்கும் வேப்பந்தட்டையில் 4 பேருக்கும், வேப்பூரில் 1 பேருக்கும், ஆலத்தூரில் 2 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17 ஆக உள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 2,441 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இதில் 2,350 பேர் குணமடைந்துள்ளார்கள்,மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் 68 பேர் கொரோனாவிற்கு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

Similar News