பெரம்பலூரில் கடைகளில் சிசிடிவி கேமிரா அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

பெரம்பலூரில் கடை உரிமையாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் சிசிடிவி கேமிரா அமைப்பது குறித்து ஆலோசனை நடந்தது.;

Update: 2021-12-22 19:22 GMT
பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி  உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களிடம் சைபர் குற்றங்கள் குறித்தும், நகை கடைகளில் பாதுகாப்பை மேலும் உறுதிபடுத்தும் வகையில் CCTV கேமாராக்கள் அமைப்பது குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் தலைமை வகித்தார்.  . இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெரம்பலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் (பொ) பாலசுப்ரமணியன், சைபர் கிரைம் காவல் கலா மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டு சிறப்பாக விழிப்புணர்வு கருத்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News