குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பெரம்பலூர் போலீசார் விழிப்புணர்வு

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி பெரம்பலூர் போலீசார் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2021-12-27 14:39 GMT
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி போலீசார் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராம பொது மக்களிடம்  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பெரம்பலூர் மாவட்டபோலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் காவலன் SOS செயலி குறித்தும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர்.

Tags:    

Similar News