கிராம மக்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

பெரம்பலூர் மாவட்த்தில் கிராம மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.

Update: 2021-12-29 03:20 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூர் கிராம பொது மக்களிடம்  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் காவலன் SOS செயலி குறித்தும் குழந்தை திருமணம் குறித்தும் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News