பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை கட்டாத 14 கடைகளுக்கு சீல் வைப்பு

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை கட்டாத 14 கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2021-11-29 11:22 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி கட்டிடங்களில் கடைகள் செயல்பட்டு வருகின்றன . இதில் 14 கடைகளின் உரிமையாளர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணமான , மொத்தம் ரூ .5 லட்சத்து 25 ஆயிரத்து 945 - ஐ செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது . இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உத்தரவின்பேரில் , நகராட்சி ஊழியர்கள் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த 14 கடைகளை பூட்டி ' சீல் வைத்தனர்.

Tags:    

Similar News