கொரோனா இல்லாத மாவட்டமாகுமா பெரம்பலுார் ?ஒருவர் மட்டுமே சிகிச்சை!

Update: 2020-12-30 04:32 GMT

பெரம்பலுார் மாவட்டத்தில் நேற்று வரை ஒரே ஒரு நபர் மட்டுமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து இன்று வரை உலகம் விடுபடவில்லை. அந்த வகையில் தமிழகத்திலும் தினசரி கொரோனாவினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெரம்பலுார் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி ஒரே ஒரு நபர் மட்டுமே கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் குணமடையும் பட்சத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக பெரம்பலுார் மாற வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News