குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதியில் லாரிகள் நேருக்குநேர் மோதல்

குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதியில் லாரிகள் நேருக்குநேர் மோதிய விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரை பொதுமக்கள் மீட்டனர்

Update: 2022-03-09 14:00 GMT

உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய சாலையில் உள்ள பாய்ஸ் கம்பெனி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய சாலையில் உள்ள பாய்ஸ் கம்பெனி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் லாரி ஓட்டுனர் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தார் உடனே அருகில் இருந்த பொதுமக்கள் லாரியில் சிக்கி இருந்த ஓட்டுநரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News