நீலகிரியில் மெகா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர்

கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் எல்லையோர கிராமங்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-12 09:10 GMT

குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக பழங்குடியின மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 93% நபர்களுக்கு முதல் தடுப்பு ஊசி செலுத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் 100% முதல் தடுப்பு ஊசி செலுத்திய மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அறிவிக்கப்பட உள்ளது. குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் 295 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.சுமார் 1180 கள பணியாளர்கள் இந்த தடுப்பூசி முகாமில் பணியாற்றி வருகின்றனர்.

முகாமை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கொரோனா அதிகரித்துச் செல்லும் நிலையில், கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், ,கேரளா எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் எல்லையோர கிராமங்களில் சிறப்பு முகாம் மூலம் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக. கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முழு கண்காணிப்புக்கு பிறகு நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த சிறப்பு முகாமில் நீலகிரி நோடல் அலுவலர் முனைவர் சங்கர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள் ) மரு,பாலுசாமி உட்பட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News