குன்னூரில் டீ கடைக்குள் புகுந்த சிறுத்தை குட்டியால் பரபரப்பு

சிறுத்தை குட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

Update: 2021-12-20 10:12 GMT

மீட்கப்பட்ட சிறுத்தை குட்டி.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த சிறுத்தை குட்டி ஒன்று பேருந்து நிலையத்தில் இருந்த டீக்கடைக்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறுத்தை குட்டியை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் உடனடியாக அருகில் இருந்த வனப்பகுதிக்கு சிறுத்தை குட்டியை கொண்டு சென்று விட்டனர்.

Tags:    

Similar News