ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் கவர்னர் அஞ்சலி

முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கவர்னர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Update: 2022-01-06 16:30 GMT

அஞ்சலி செலுத்தும் கவர்னர்.

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே காட்டேரி அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் எனும் பகுதியில் மோசமான வானிலையால் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்தனர். இன்று அந்தப் பகுதியில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

Similar News