கோத்தகிரி சாலையில் ஒற்றை காட்டு யானை உலா!

கோத்தகிரியில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானையை அடர் வனத்தில் விரட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-13 15:54 GMT

கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை மூள்ளுர் பகுதியில் சாலையில் உலாவிய யானை. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதியில், அண்மைக்காலமாக சாலைகளில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இன்று மாலை, கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை மூள்ளுர் பகுதியில் நீண்ட நேரமாக சாலையிலே உலாவியது .

இதனால், அப்பகுதி மக்கள்,  வாகன ஓட்டிகள் கலக்கமடைந்தனர். இவ்வாறு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, வனத்துறையினர் காட்டு யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News