தமிழக அரசை கண்டித்து இந்து முன்ணனி சார்பில் ஆர்ப்பாட்டம்

நீலகிரியில் படுகரின மக்களின் ஹெத்தை கோயிலை கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டுமென கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-10-20 11:08 GMT

கோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கோயில்களை அரசு கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதை கண்டிக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் இந்து முன்னணி கோரிக்கைகளான கோயில்கள் அரசின் பிடியில் வந்த பின் கடந்த 60 ஆண்டுகளில் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை காணவில்லை. ஆயிரக்கணக்கான கோயில்களில் 7000 சிலைகளை காணவில்லை. 1700 சிலைகள் போலியானவை, என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார், நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் ஹெத்தை கோயிலை கையகப்படுத்தும் அரசை வன்மையாக கண்டிப்பதாகவும், இது ஒட்டுமொத்த நீலகிரி மாவட்டத்திலுள்ள படுகர் இன மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் அழிப்பதாக கூறினார்.

இதுமட்டுமல்லாமல் கோவில் நகைகளை உருக்கும் அறிவிப்பைக் கண்டித்து எதிர்வரும் 26 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அவர் தெரிவித்தார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவிலை காக்க போராட்டம் நடத்தினர்.

Tags:    

Similar News