குன்னூரில் ஆற்றில் அடித்து செல்லப்படும் கால்நடைகள்

ஆற்றில் அடித்து செல்லப்படும் இறந்த கால்நடைகளால் நோய் தொற்றும் அபாயமுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

Update: 2021-11-20 06:45 GMT

ஆற்றில் அடித்து செல்லப்படும் கால்நடைகள்.

குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான அருவங்காடு, எல்லநள்ளி, பாய்ஸ் கம்பெனி, பர்லியார் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆற்றோரங்களில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் அடித்து செல்லப்பட்டது. இந்த வெலிங்டன் லேக் பகுதியிலிருந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு எம். ஜி.ஆர் நகர் பகுதியில் ஆற்றில் உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் அப்புறப்படுத்தாததால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News