நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் கோத்தகிரியில் ரத்ததான முகாம்

நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் கோத்தகிரியில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.

Update: 2021-06-16 11:24 GMT

கொரோனா ஊரடங்கு காலத்தில், நீலகிரி சேவா கேந்திரத்தினர் பொது மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று கோத்தகிரியில் சேவா கேந்திரம் மூலம் ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து ரத்ததானம் செய்தனர் .

இத் குறித்து, நீலகிரி மாவட்ட சேவா கேந்திரம் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கூறுகையில்,  ஊரடங்கு காலத்தில், பொது மக்களுக்கான உணவு, காய்கறி மளிகை தொகுப்புகள், கபசுரக் குடிநீர் வழங்குதல் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்தல் உள்ளிட்ட சமூகப்பணிகளை செய்து வருகிறோம். ஊரடங்கு முடியும்வரை மக்களுக்கான இத்தகைய பணிகள் தொடரும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், கோத்தகிரி தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஹரி சுதன், நீலகிரி சேவா கேந்திர பொறுப்பாளர்கள் கணேஷ் வைபவ், பூவராஜன், குமார்,மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News