கோத்தகிரி மரத்தில் ஏறி விளையாடிய கரடி: தேயிலை தொழிலாளர்கள் பீதி

கோத்தகிரி அருகே, கரடியை கண்டு தேயிலைத் தொழிலாளர்கள் பீதியடைந்தனர்

Update: 2022-04-21 00:45 GMT

மரத்தில் ஏறி விளையாடிய கரடி. 

கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில், மரம் ஒன்றின் மீது கரடி ஒன்று ஏறி இறங்கி விளையாடி மகிழ்ந்தது. இதை கண்டு ஆச்சரியமும், பீதியும் அமடைந்த தேயிலைப் பறிக்கும் பணியில் இருந்த சிலர், அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சிறிது நேரம்,  அங்கு விளையாடிய கரடி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரடிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News