குன்னூர் அருகே சண்டையிட்ட காட்டெருமைகளால் பரபரப்பு: மக்கள் அச்சம்

குன்னூர் அருகே உலிக்கல் பகுதியில் 2 காட்டெருமைகள் ஒரு மணி நேரம் சண்டையிட்டதால் கிராமமக்கள் கண்டு அச்சமடைந்தனர்.

Update: 2021-10-14 06:25 GMT

ஒரு மணி நேரம் சண்டையிட்ட 2 காட்டெருமைகள்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேடி அடிக்கடி கிராம பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் கிராம பகுதிக்கு வந்த 2 காட்டெருமைகள் அங்குள்ள புல் மைதானத்தில் ஒரு மணி நேரம் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டு சண்டையிட்டது.

இதனால் கிராம பகுதியில் இருந்த பொது மக்கள் அலறி ஓடினர். சிலர் 2 காட்டெருமைகள் சண்டையிடுவதை செல்போனில் பதிவு செய்து ரசித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு சண்டையிட்டு களைத்த காட்டெருமைகள் கலைந்து சென்றன. இந்த காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News