குத்தாலத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிய இருவர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஆட்டோவை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-30 15:15 GMT

மயிலாடுதுறை அருகே ஆட்டோ திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்தலிப் (35). இவர் கடந்த 14-ஆம் தேதி இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஆட்டோ மாயமானது குறித்து முத்தலிப் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், தலைமைக் காவலர்கள் நரசிம்மபாரதி உள்ளிட்ட தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தை  சேர்ந்த அலாவுதீன் (31)., நன்னிலம் தாலுகா ஆதலையூர் கிராமத்தைச் சேர்ந்த சித்திக் (31) ஆகிய இருவரும் ஆட்டோவை திருடிச் சென்று திருச்சியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அலாவுதீன், சித்திக் இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்கள் திருடி விற்பனை செய்த ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News