யானைக்கே கொரோனா பயம் : கபசுர குடிநீர் வழங்கிய பாகன்

விலங்குகளுக்கும் கொரோனா பரவும் என்கிற அச்சத்தால் மயிலாடுதுறை கோயில் யானைக்கு கபசுர குடிநீரை பாகன் வழங்கினார்.

Update: 2021-05-17 11:24 GMT

தமிழகத்தில்கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மனிதர்களிடையே மட்டுமே பரவி வந்த லைரஸ் தற்போது விலங்குகளுக்கும் பரவும் என்ற தகவல் வெளியாகி வருகிறது.,

ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவமும் வன விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாளுக்கு வழங்கினார்

கோயில் பாகன் வினோத். மேலும், யானைக்கு மூலிகை சாம்பிராணி புகை போட்டு யானைக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கோயில் பாகன்.

Tags:    

Similar News