மயிலாடுதுறையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் திரையிடப்பட்டது

மயிலாடுதுறையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் போலீஸ் பாதுககாப்புடன் திரையிடப்பட்டது

Update: 2022-03-10 10:22 GMT

கடந்த ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. வன்னியர்களை தவறாக சித்தரிப்பதாக பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. சூர்யாவின் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் பா.ம.க.வினர் வெளியிட எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பா.ம.க. சார்பில் சூர்யாவை தாக்குபவர்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். சூர்யாவின் நடிப்பில் வெளிவரும் புதிய படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் இன்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று பல்வேறு மாவட்டங்களில் பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை சீர்காழி ஆகிய இரண்டு திரையரங்களில் சூர்யாவின் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. போலீசார் திரையரங்குகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை விஜயா திரையரங்கில் 10:30 மணிக்கு எதற்கும் துணிந்தவன் படம் போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்டது.

Tags:    

Similar News