பெரம்பூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

குத்தாலம் ஒன்றியம், பெரம்பூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-02-14 06:31 GMT

பெரம்பூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம் .

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், பெரம்பூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்து துறை சார்பில் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இதில் ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், ஒன்றிய பெருந்தலைவர்கள் மகேந்திரன் ,நந்தினி ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் மற்றும் மருத்துவ குழுவினர் செவிலியர்கள் மாணவ பலர் பங்கேற்றனர்.

அங்கன்வாடி சார்பாக தாய்மார்கள் கருவுற்ற நாள் முதல் குழந்தை 2 வயது முதல் 1000 நாட்கள் பராமரிப்பு குறித்து காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் விளக்க படங்கள் மற்றும் பொருட்காட்சி வைக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News