சீர்காழியில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

சீர்காழியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Update: 2022-02-13 12:53 GMT

 திமுக வேட்பாளர் ரேணுகாதேவி ஜவகரை ஆதரித்து சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

நடைபெறவுள்ள  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீர்காழி நகராட்சியில் 23,வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ரேணுகாதேவி ஜவகரை ஆதரித்து சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இதில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்து குபேரன்,  ஜவகர், திருச்செல்வம்,  செல்வம் முத்துக்குமார் உள்ளிட்ட  நிர்வாகிகள் 23,வது வார்டுக்கு உட்பட்ட வஉசி கிழக்குதெரு,  இந்திரா நகர், பசும்பொன் முத்துராமலிங்கனார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின்போது வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

Tags:    

Similar News