ஆவணமில்லாமல் கொண்டு சென்ற வெள்ளி கொலுசு, பணம் பறிமுதல்

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசுகள் ரூ. 90 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-07 09:59 GMT

மயிலாடுதுறையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசுகள் ரூ. 90 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த அபிஷேக் (30). இவர் நகை கடை நடத்தி வருகிறார். அவர் இன்று காலை தனது காரில் நாலு கிலோ எடையுள்ள பழைய வெள்ளி கொலுசுகளை பாலிஷ் போடுவதற்காக சென்னைக்கு எடுத்துச் சென்றார்.

அப்போது சீர்காழி புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் அபிஷேக்கின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.90 ஆயிரம் பணம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனை அடுத்து பறக்கும் படை அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் கொலுசுகள் காற்றும் பணத்தை பறிமுதல் செய்து சீர்காழி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் தாசில்தாருமான ஹரிதரனிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News