மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2022-03-04 05:00 GMT

தமிழகத்தில் 4ம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை முதல்,  பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோயில், மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்து  லேசான மழை பெய்து வருகிறது.

தற்போதைய மழையால், நெல் கொள்முதல் பாதிப்படைவதோடு, உளுந்து, பயிறு சாகுபடியும் வெகுவாக பாதிப்படையும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News