தருமபுரம் ஆதீன பட்டண பிரவேசத்திற்கு தடை: முக்குலத்தோர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற உள்ள பட்டண பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததை திரும்பப் பெற வலியுறுத்தி முக்குலத்தோர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-05-04 07:46 GMT

கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கொண்டு அகில இந்திய முக்குலத்தோர் பாசறையினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் 

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து  பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியில்  மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவிற்கு மதுரை ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனகர்த்தர்கள் மற்றும் ஆன்மீக பேரவைகளை கண்டனம் தெரிவித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அப்பகுதி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை தருமபுர ஆதீன நுழைவு வாயில் முன்பு  தூக்கு கயிற்றை தலையில் மாட்டிக்கொண்டு அகில இந்திய முக்குலத்தோர் பாசறையினர் நூதன முறையில் தடை உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட இளைஞரணி செயலாளர் கில்லி பிரகாஷ், நகர செயலாளர் முத்து முரளி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தூக்குக் கயிற்றை கழுத்தில் மாற்றி 500 ஆண்டுகளாக நடைபெறும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்ததை திரும்பப் பெற வலியுறுத்தியும், திரும்பப் பெறவில்லை என்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியும் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி கொண்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News