தனியார் விளம்பரம்: மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பெயர் பலகை அகற்றம்

தமிழக டிஜிபியின் உத்தரவுப்படி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தனியார் விளம்பரத்துடன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றம்

Update: 2021-09-18 06:20 GMT

தமிழக டிஜிபியின் உத்தரவுப்படி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தனியார் விளம்பரத்துடன் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றம்.

தமிழகத்தில் காவல்துறை அலுவலகங்களில் தனியார் விளம்பரத்துடன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் தனியார் விளம்பரத்துடன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை மாற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வங்கியின் விளம்பரத்துடன் வைக்கப்பட்டிருந்த காவல் நிலைய பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புதிதாக காவல் நிலையம், மயிலாடுதுறை என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை காவல் நிலைய பெயர் பலகையில் பொருத்தினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தனியார் விளம்பரத்துடன் கூடிய பெயர் பலகைகள் அகற்றப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News