செம்பனார்கோவில் ஒன்றியத்தில் மின் மாற்றியை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் புதிய மின் மாற்றியை எம்.எல்.ஏ. நிவேதா முருகன் திறந்து வைத்தார்.

Update: 2021-11-25 13:40 GMT

மயிலாடுதுறை ஒன்றியத்தில் புதிய மின்மாற்றியை நிவதோ எம். முருகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, எடுத்துக்கட்டிசாத்தனூர், கொத்தங்குடி ஊராட்சிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்டம், சங்கரன்பந்தல் பிரிவு தாழ்வழுத்த மின்சாரத்தை சரி செய்து 2 புதிய 63 கிலோ வாட் மின்மாற்றியை எடுத்துக்கட்டி மற்றும் கொத்தங்குடி ஊராட்சி வேலம்புதுக்குடி கிராம மக்கள் பயன்பாட்டிற்காக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ரிப்பன் கத்தரித்து, மின்மாற்றியை ஆன் செய்து திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் ஞானவேலன் மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜி.என்.ரவி, மாநில விவசாய அணி துணை செயலாளர் பால அருள்செல்வன், ஒன்றிய செயலாளர், அப்துல்மாலிக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர்கள் பைலட், தம்பு மோகன், மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் எழில்ராஜ், மின் வாரிய பணியாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News