சுருக்குமடிவலை பிரச்னை: சீர்காழிக்கு வந்த 13 படகுகளை வெளியேற்ற போலீசார் நோட்டீஸ்

சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீசார் சீர்காழி பகுதியில் இருந்து படகுகளை வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.

Update: 2021-08-29 15:30 GMT

பாண்டிச்சேரியில் சுருக்குமடி மீனவர்கள் பிரச்னையால் சீர்காழிக்கு கொண்டு வந்த 13 படகுகளை வெளியேற்றபோலீஸார் எச்சரிக்கை நோட்டீஸ் அளித்துள்ளனர்.

பாண்டிச்சேரி அருகே நல்லவாடு மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி வீராம்பட்டினம் கிராம பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என்று தடுத்த மற்றொரு தரப்பு மீனவர்களும் நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை செய்து சுமூக நடவடிக்கை மேற்கொண்டததால் மீனவர்கள் நடுகடலில் மோதலை விடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.  இதையடுத்து இரு தரப்புக்கும் மீனவர்கள் கிராமத்திலும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நல்லவாடு சுருக்கு மடிவலை மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக 13 படகுகளை மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பழையார், பூம்புகார் உள்ளிட்ட பகுதியில் உள்ள துறைமுகத்திற்கு எடுத்து வந்து நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக இந்த பகுதியில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் மீன்வளத்துறை அதிகாரிகள், போலீசார் சீர்காழி பகுதியில் இருந்து படகுகளை வெளியேற்றுமாறு படகின் மீது நோட்டீஸ் அறிவிப்பு ஒட்டியதுடன் சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்

Tags:    

Similar News