பேரறிவாளன் விடுதலை: மயிலாடுதுறையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்

Update: 2022-05-18 13:00 GMT

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் கடந்த31 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் சட்டப் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பல்வேறு அமைப்பினர் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பினை வரவேற்கும் விதமாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகத்தினர்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசை பாராட்டியும், தமிழக ஆளுநரை பதவி விலகக் கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதில் திராவிடர் விடுதலை கழகத்தினர் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சிறையில் உள்ள முருகன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News