மயிலாடுதுறை அருகே 4 அரசு பள்ளிகளுக்கு ஓ.என்.ஜி.சி. கணினி, உபகரணங்கள்

மயிலாடுதுறை அருகே 4 அரசு பள்ளிகளுக்கு ஓ.என்.ஜி.சி. சார்பில் கணினி, உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Update: 2022-04-24 05:04 GMT

மயிலாடுதுறை அருகே 4 அரசு பள்ளிகளுக்கு ஓ.என்.ஜி.சி. சார்பில் கணினி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.என்.ஜி.சி.யின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நான்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சிறப்பு அலுவலர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதாமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 10 லட்சம் மதிப்புடைய கணினிகள் , நாற்காலிகள், டிவி , ப்ரொஜெக்டர் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை நான்கு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News