சீர்காழி அருகே திட்டையில் புதிய மின்மாற்றி பயன்பாட்டிற்கு தொடக்கம்

சீர்காழி அருகே திட்டையில் புதிய மின்மாற்றியை பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-08 07:58 GMT

குத்தாலம் அருகே திட்டையில் புதிய மின்மாற்றியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டை கிராமத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்கு உள்ளானார்கள்.

இதனால் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 7.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கும் விழா திட்டை தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் சீர்காழி தெற்கு உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி சீர்காழி வடக்கு உதவி செயற்பொறியாளர் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News