மயிலாடுதுறை: கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை

மயிலாடுதுறைஅருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

Update: 2022-02-18 06:55 GMT

ஆயுள் தண்டனை அடைந்த பிரகாஷ்.

மயிலாடுதுறை அருகே மாப்படுகை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(58) விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ்(49) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள டீக்கடையில் சேகர் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கும், பிரகாஷ்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டையை எடுத்து, சேகரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகிய இவ்வழக்கில் நீதிபதி பன்னீர்செல்வம் கொலை குற்றவாளி பிரகாசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் வித்து தீர்ப்பு வழங்கினார். மயிலாடுதுறையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தொடங்கப்பட்டு முதல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குற்றவாளி பிரகாசை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று  திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News