மயிலாடுதுறை: மூவலூர் ஊராட்சி வன்னியர் சங்கத்தினர் தி.மு.க.வில் ஐக்கியம்

மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் ஊராட்சியை சேர்ந்த வன்னியர் சங்கத்தினர் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

Update: 2022-01-21 10:00 GMT

மயிலாடுதுறை அருகே வன்னியர் சங்கத்தினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் மூவலூர் ஊராட்சி மற்றும் செம்பை ஒன்றியத்திலிருந்து ஒன்றிய செயலாளர்கள் இமய நாதன், இளையபெருமாள் ஏற்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பிரேம் குமார் உட்பட 100-க்கும் மேற்பட்ட வன்னியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பா.ம.க.வினர் அக்கட்சியிலிருந்து விலகி நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் பொறையார் கலைஞர் அரங்கத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், அரசு வழக்கறிஞர்கள் டாக்டர் இராம-சேயோன், சிவதாஸ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகமணி, பெரு வீரமணி சரவணன், ஒன்றிய பெருந்தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் கழக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News