மயிலாடுதுறை ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை ஸ்ரீபெரிய மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-05-14 07:50 GMT

மயிலாடுதுறை ஸ்ரீபெரிய மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு 20 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

மயிலாடுதுறை ஸ்ரீபெரிய மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி உற்சவம், விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கொத்த தெருவில் பழைமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் 60 ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 3ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 10ம் நாள் திருவிழாவான இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காவிரிக் கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கரக ஊர்வலம் துவங்கியது. 20 அடி நீள அலகு காவடி, சக்தி கரகம் ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன. அங்கு தீக்குண்டத்தில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்து தீமிதி திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனர். னர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Tags:    

Similar News