மயிலாடுதுறையில் செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறையில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-04-26 10:30 GMT

மயிலாடுதுறையில், செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கப்பட்டன. 

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை, கை, கால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் ஆளுநர் சகாதேவன் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் பாலாஜி சிறப்புரையாற்றி,  50 மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை, கை, கால்களை வழங்கினார். ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ராஜமாணிக்கம் நன்றி உரை ஆற்றினர்.

Tags:    

Similar News