சீர்காழியில் ஒரு லட்சம் மதிப்பிலான சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஒரு லட்சம் மதிப்பிலான சாராய ஊறல்கள் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அழித்தனர்.

Update: 2021-05-26 17:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ரூ ஒரு லட்சம் மதிப்புள்ள சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் கோட்டைமேடு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் சிலர் சாராய ஊறல் போட்டு இருப்பதாக மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் ‌ புதுபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா தலைமையிலான போலீசார் அங்கு நேரில் சென்று ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பொழுது கோட்டைமேடு பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் நடுவே சாராய ஊறல்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்ததது.

இதனை அடுத்து அதனை கைப்பற்றிய போலீசார் அதனை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்ட சாராய ஊறல்கள் மதிப்பு ரூ.1லட்சம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டறிந்து, தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News