மயிலாடுதுறை: அ.தி.மு.க.மாவட்ட செயலாளர், அண்ணாசிலைக்கு மாலை அணிவிப்பு

மயிலாடுதுறை அ.தி.மு.க.மாவட்ட செயலாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவுன்ராஜ் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார்.

Update: 2022-04-29 10:44 GMT

மயிலாடுதுறை மாவட்டஅ.தி.மு.க. செயலாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவுன்ராஜ் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார்.

அ.தி.மு.க. அமைப்புத் தேர்தல் மாவட்ட வாரியாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர், அவைத் தலைவர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் உள்ளிட்ட 9 பதவிகளுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. மயிலாடுதுறை அ.தி.மு..க மாவட்ட கழக செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் இரண்டாவது முறையாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக அ.தி.மு.க. தலைமை அறிவித்தது.

இதையடுத்து, மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். மேலும் பட்டாசு வெடித்து மாவட்ட செயலாளரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், சக்தி மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. செயலாளர்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News