மகாசிவராத்திரியையொட்டி மயிலாடுதுறையில் பனிலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு

மகாசிவராத்திரியையொட்டி மயிலாடுதுறையில் பனிலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-03-01 15:15 GMT

பனி லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில் மகாசிவராத்திரியையொட்டி 5 அடி உயரத்தில் பனிலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

பனிலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள், மகாதீபாராதனை நடந்தது. இதில் பா.ஜ.க. கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் என திரளான பக்தர்கள் பனிலிங்கத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News