மயிலாடுதுறை அருகே சொகுசு காரில் சாராயம் கடத்தியவர் கைது

மயிலாடுதுறை அருகே, சொகுசு காரில் சாராயம் கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-01-15 05:00 GMT
பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் கைதானவர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில், சாராய விற்பனையை தடுப்பதற்காக காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  பெரம்பூர் அருகே காருகுடி என்ற இடத்தில் காரைக்காலில் இருந்து வேகமாக வந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்தினர்.

இச்சோதனையில்,  அக்காரில் மூட்டை மூட்டையாக பாண்டி சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது. செம்பனார்கோவிலைச் சேர்ந்த குமார் (44) என்பதும் மயிலாடுதுறை அருகில் தனியூர் என்ற இடத்தில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து சாராயத்தை பாக்கெட் போட்டு சில்லரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, குமாரை கைது செய்து, சாராயம் மற்றும் காரினை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வத்திடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார் மற்றும் சாராயத்தின் மதிப்பு ரூ.13.20 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News