திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக நிறைவு நாள்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2023-04-13 16:00 GMT

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் முகப்பு தோற்றம் (பைல் படம்).

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த 1997 ஆம் ஆண்டு மாசி மாதம் 26-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற ஆண்டு திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேலும் , இன்று முதலாம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவு விழாவை முன்னிட்டு, தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், 3 -யாக குண்டங்கள் அமைத்தனர். மேலும், 20- சிவாச்சாரியார்கள் திருமுறை பாராயணம், வேத பாராயணம், மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க புர்ணாவதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. அதனைத் தொடர்ந்து , அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர் மற்றும் கால சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில், வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News