மயிலாடுதுறை அருகே சிதிலமடைந்த வீட்டில் வசித்த மூதாட்டிக்கு உதவி

மயிலாடுதுறை அருகே சிதிலமடைந்த வீட்டில் வசித்த மூதாட்டிக்கு நண்பர்கள் குழு மூலம் வீடு அமைத்து கொடுத்து உதவி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-20 08:00 GMT

மயிலாடுதுறை அருகே நண்பர்கள் குழுவினர் மூதாட்டிக்கு உதவி செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட எருக்கட்டாஞ்சேரி தெற்கு மேட்டுச்சேரியில் மெர்சி என்ற மூதாட்டி மிகவும் சிதிலமடைந்த கூரை கூட இல்லாத வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். இதனை அறிந்த தரங்கம்பாடி பொதுத்தொழிலாளர் சங்க பொறுப்பாளரும் முன்னாள் கவுன்சிலருமான மாணிக்க அருண்குமார் தனது முக நூல் நண்பர்கள் மூலம் நிதி திரட்டி சுமார் 40 ஆயிரம் மதிப்பில் கூரை வீடு அமைத்தும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கியும் உதவியுள்ளார்கள்.

இதில் சின்னத்திரை நட்சத்திரம் அறந்தாங்கி நிஷா, சென்னை தொழிலதிபர் கிளாசிக் சுரேஸ், தரங்கம்பாடி செயல் அலுவலர் கமலக்கண்ணன், ஆசிரியை மீனாட்சி உட்பட பல முகநூல் நண்பர்கள் மற்றும் விநாயகர் பாளையம் பொறுப்பாளர்கள் இணைந்து உதவியுள்ளனர் இதேபோன்று தொடர்ந்து பல உதவிகளை ஏழ்மையில் இருப்பவர்களை தேடி செய்து வருகின்றனர். இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News