மயிலாடுதுறையில் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மைசூரு வண்டியை முதலாவது நடைமேடையில் நிறுத்தரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்

Update: 2022-05-20 16:00 GMT

மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்பயணிகள் சங்கத்தினர்

மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு வாரத்தில் 5 நாள் மட்டும் இயக்கப்படும் ரயிலை 7 நாள்களும் இயக்கவும், இந்த ரயிலையும், மாலை 5.45 மணிக்கு புறப்படும் மைசூரு வண்டியையும் முதல் நடைமேடையில் நிறுத்தவும் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி மயிலாடுதுறையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்:-

மயிலாடுதுறையில் இருந்து காலை 8.15 மணிக்கு திருச்சிக்கு வாரத்தில் 5 நாள் மட்டும் இயக்கப்படும் ரயிலை 7 நாள்களும் இயக்கவும், இந்த ரயிலையும், மாலை 5.45 மணிக்கு புறப்படும் மைசூரு வண்டியையும் முதலாவது நடைமேடையில் நிறுத்தவும் ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு தமிழன் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ரயில் பயணிகள் சங்கத் தலைவர் மகாலிங்கம் மற்றும் மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழர் தேசிய முன்னணி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News