108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தி: பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடக்கம்

மயிலாடுதுறை அடுத்து மங்கைநல்லூரில் புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை எம்எவ்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார்

Update: 2022-02-26 15:15 GMT

மயிலாடுதுறை அடுத்து மங்கைநல்லூரில் புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்:-

மயிலாடுதுறை அடுத்து மங்கைநல்லூரில் புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் அவசரகால சிகிச்சை பெறுவதற்காக அவசரகால உறுதியான 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனையில் கொண்டு செல்வது, வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வாகன வசதி இன்றி தவிப்பவர்களுக்கு உதவுவது போன்ற சேவை பணிகளை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை மங்கைநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கோபி, முன்னிலையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு  108 ஆம்புலன்ஸ் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, செம்பை பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ செவிலியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News