மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம்

Update: 2021-03-07 05:15 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1073 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சீர்காழி தனிதொகுதியாகவும், மற்றவை பொதுதொகுதிகளாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கூடுதல் வாக்குசாவடி மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டத்தில் 1073 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 42 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தோ-திபோத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 91 பேர் மயிலாடுதுறை மாவட்ட போலீசார், ஊர்காவல்படை தன்னார்வலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாதா தெரிவித்தார்.

Tags:    

Similar News