கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் உள்ளே புகுந்த டிராக்டர்
மயிலாடுதுறை மாவட்டம் மேலச்சாலை என்ற இடத்தில் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த வீட்டின் உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி- அண்ணன் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான டிராக்டரை அவரது மகன் ஓட்டிச் சென்றுள்ளார். அப்பொழுது மேலச்சாலை என்ற இடத்தில் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் உள்ளே புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ராஜேந்திரன் என்பவர் வீடு முற்றிலும் இடிந்த நிலையில் வீட்டின் உள்ளே இருந்த அவரும், அவரது உறவினரான ராஜேந்திரனும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். விபத்து குறித்து வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.