விக்கிரமங்கலத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விக்கிரமங்கலத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;

Update: 2022-08-12 08:53 GMT

விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி சார்பில், போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் உத்தரவை ஏற்று மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைக்கிணங்க போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் தேசிய கொடியை வீடு தோறும் ஏற்றுதல் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

எட்டு ஊர் கமிட்டித் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். செல்லம்பட்டி ஊராட்சி ஓன்றியத் தலைவர் கவிதா ராஜா முன்னிலை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவராம பாண்டியன் வரவேற்றார். உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், சிறப்புரையாற்றி, கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

கிராமத்தின், முக்கிய வீதிகள் வழியாக மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.

இதில், மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன், ஊராட்சி செயலர் பால்பாண்டி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News