கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு
மதுரை மாவட்டத்தில் காரில் 340 கிலோ கஞ்சா கடத்திய நபர்களை கைது செய்த தனிப்படையினரை டிஐஜி பாராட்டினார்
மதுரை மாவட்டத்தில் காரில், 340 கிலோ கஞ்சா கடத்திய நபர்களை பிடித்து கைது செய்ய தனிப்படையினரை, மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் பொன்னி பாராட்டினார். மதுரை அருகே காரில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காரை மடக்கி கஞ்சாவுடன், கடத்தியவர்களையும் கைது செய்தனர். இவர்களை, மதுரை சரக டிஐஜி பொன்னி, போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் பாராட்டினர்.