பேரையூர் அருகே புறக்காவல் நிலையம் : ஐ.ஜி. திறப்பு

இப்புற காவல்நிலையத்தில் காவலர்கள் தொடர்ந்து, பணியில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

Update: 2021-11-27 00:30 GMT

மதுரை  அருகே பேரையூர் அருகே புறக்காவல் நிலையத்தை  திறந்து வைத்த தென்மண்டல காவல்துறை தலைவர் அன்பு 

மதுரை பேரையூர் அருகே புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில், குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலையம் ஒன்று பேரையூர் - அம்மாபட்டி செல்லும் வழியில் எஸ்.வி.என் நகரில்  இந்த புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புறக்காவல்நிலையத்தை தென் மண்டல காவல்துறை தலைவர் அன்பு நேற்று திறந்து வைத்தார்.  இதில், மதுரை சரக காவல்துறை துணை தலைவர் காமினி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்,  காவல் துணைக் கண்காணிப்பாளர் (பேரையூர் உட்கோட்டம்) சரோஜா, பேரையூர் வட்டாட்சியர் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இப்புற காவல்நிலையத்தில் காவலர்கள் தொடர்ந்து, பணியில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில், குற்றங்கள் எதுவும் நடக்காமல் தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்காணிப்பதற்காகவும், இந்தப் புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News