உசிலம்பட்டி முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

உசிலம்பட்டி முத்துராமலிங்க தேவர் கல்லூரி மற்றும் பி.கே.எம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

Update: 2021-10-14 09:32 GMT

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மற்றும் பி.கே.எம் அறக்கட்டளை சார்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மற்றும் பி.கே.எம் அறக்கட்டளை சார்பில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பாலகிருஷ்ணன் பொருளாளர் வனராஜா பி.கே.எம் அறக்கட்டளை தலைவர் புலவர் சின்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் வரவேற்று பேசினார். முதல்வர் ரவி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை நிக்கோலஸ் பிரான்சிஸ் மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையை எதிர்கொள்வது மற்றும் வேலை வாய்ப்பு எளிதில் பெருவது குறித்து வழி காட்டி நிகழ்ச்சி நடந்தது. பி.கே.எம் அறக்கட்டளை செயலாளர் ஜெயராஜ் பொருளாளர் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தினர்.

Tags:    

Similar News